மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலிக்கு முன் சம்பள உயர்வு? DA & HRA கணக்கீடு! முழு விவரம் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலிக்கு முன் சம்பள உயர்வு? DA & HRA கணக்கீடு! முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலிக்கு முன் சம்பள உயர்வு? DA & HRA கணக்கீடு! முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலிக்கு முன் சம்பள உயர்வு? DA & HRA கணக்கீடு! முழு விவரம் இதோ!

வருகின்ற ஹோலி பண்டிகைக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வரும் அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

DA உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு வருகின்ற ஹோலி பண்டிகைக்கு முன்னதாக அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த அறிவிப்பு குறித்து அரசிடம் இருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, அகவிலைப்படி (DA) மற்றும் DR நிலுவைகள் மற்றும் வீட்டு வாடகைப்படி (HRA) உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. ஆனால் இது தொடர்பாக மத்திய அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட், விரைவில் ரூ.1000 உரிமைத்தொகை – முதல்வர் உறுதி!

என்றாலும் அதிகாரப்பூர்வ புதுப்பிப்புகள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் 2022 கூட்டத்திற்கு பின்னர் அகவிலைப்படி தொகை 3 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக பல்வேறு அறிக்கைகள் தகவல் அளித்துள்ளது. இப்போது அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அறிவிப்புக்கு பின்பாக, மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த பிறகு அகவிலைப்படி உயர்வு குறித்த அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

தற்போது வரை, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகை 31 சதவீதமாக உள்ளது. இது மேலும் 3 சதவீதம் உயர்ந்தால் மொத்த அகவிலைப்படி 34 சதவீதமாக உயரும். இதற்கிடையில் அகவிலைப்படியை கணக்கிடுவதற்கான சூத்திரம் 2006 இல் அரசாங்கத்தால் மாற்றப்பட்டது. இதன் படி மத்திய அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி சதவீதம் = (கடந்த 12 மாதங்களுக்கு AICPI (அடிப்படை ஆண்டு 2001=100) சராசரி -115.76)/115.76) x 100 என்ற அளவில் கணக்கிடப்படுகிறது. இங்கு, இந்திய நுகர்வோர் விலைக்குறியீடு (AICPI) என்பது அனைத்து சலுகையையும் குறிக்கிறது.

1 முதல் 10ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் மீண்டும் திறப்பு – 144 தடை உத்தரவு அமல்!

இது தவிர 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களின் வீட்டு வாடகைப் படியை (HRA) உயர்த்துவது தொடர்பான அறிவிப்புகளையும் அரசாங்கம் வெளியிட வாய்ப்புள்ளதாக ஊடக அறிக்கை கூறுகிறது. இந்த HRA தற்போது A, B & C நகரங்களுக்கு முறையே 24 சதவீதம், 16 சதவீதம் மற்றும் 8 சதவீதம் என வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில், ரூ.18,000 ஊதியத்தில் HRA 30 சதவீதம், 20 சதவீதம் மற்றும் 10 சதவீதம் என கணக்கிடப்படுகிறது. இப்போது அரசின் பழைய உத்தரவின்படி, DA தொகை 50 சதவீதத்தை தாண்டினால், HRA விகிதம் 30 சதவீதம், 20 சதவீதம், 10 சதவீதம் என்று உயர்வடையும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!