தமிழகத்தின் இம்மாவட்டத்தில் டிசம்பர் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து அனைத்து மத திருவிழாக்கள் நடைபெற தொடங்கி உள்ளது. அதனை தொடர்ந்து வருகிற டிசம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் புனித சவேரியார் பேராலயத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று 2வது அலை பரவலின் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் மத விழாக்கள், பொதுக்கூட்டங்கள், வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் கொரோனா தடுப்பூசிகள், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் விளைவாக தற்போது கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. எனவே மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. வழிபாட்டு தலங்களில் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால் மத திருவிழாக்கள் நடைபெற தொடங்கி உள்ளன.
தமிழகத்தில் நாளை மறுநாள் (நவ.30) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இருப்பினும் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை முறையாக கடைபிடிக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் சில முக்கிய விழாக்களுக்காக மாவட்ட வாரியாக உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இதற்காக மற்றொரு விடுமுறை நாள் பணிநாளாக அறிவிக்கப்பட்டு ஈடுசெய்யப்படும். தற்போது அந்த வகையில் நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் பேராலயத் திருவிழா வருகிற டிசம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் 10, 11ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – விபரங்கள் பதிவேற்றம்!
எனவே கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிற டிசம்பர் 3ம் தேதி (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அன்றைய தினம் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில் டிசம்பர் 11ம் தேதி பணிநாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.