தமிழகத்தில் நாளை மறுநாள் (நவ.30) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் தொடர்ந்து மாதாந்திர மின்பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் மின்பராமரிப்பு பணி காரணமாக நாளை மறுநாள் நவ.30ம் தேதி மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நவ.30 மின்தடை:
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மாவட்ட வாரியாக மின்நிலையங்களில் மாதந்தோறும் மின்பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது எதிர்காலத்தில் மின்விபத்து ஏற்படாமல் தடுக்கும் விதமாக இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் விதமாக பழுதான கம்பிகள் அகற்றப்பட்டு புதிய கம்பிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய பணிகளின் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் 10, 11ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – விபரங்கள் பதிவேற்றம்!
அவ்வாறு மின்பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் பகுதிகளில் ஏற்படும் மின்தடை குறித்து குறிப்பிட்ட மின்வாரிய பொறியாளரால் செய்திதாள் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் தகவல் வெளியிடப்படும். அந்த வகையில் சென்னையில் பூந்தமல்லி வடக்கு மற்றும் பொன்னேரி பகுதிகளில் நாளை மறுநாள் நவ.30ம் தேதி மின்பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல்மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்குள் பணி முடிந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சாலை விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்த்தால் ரூ.5,000 பரிசு – அரசு அறிவிப்பு!
அதன்படி பூந்தமல்லி வடக்கு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் துணைமின் நிலையத்தின் கீழ் பயன்பெறும் காடுவெட்டி, வீரராகவபுரம், ஆவடி மெயின் ரோடு, அருணாசலம் நகர், மேட்டுப்பாளையம், ஆயில்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதேபோல் பொன்னேரி பகுதியில் திருவாய்கண்டிகை, கரடிபுத்தூர், ஜி.ஆர் கண்டிகை, கண்ணக்கோட்டை, சின்னபுலியூர், பெரியபுலியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.