தமிழகத்தில் சாலை விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்த்தால் ரூ.5,000 பரிசு – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கும் நபருக்கு ரூ.5,000 பரிசு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் விபத்தில் சிக்கிய நபர்களை காப்பாற்ற அனைவரையும் ஊக்குவிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.5,000 பரிசு:
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் விபத்துக்கு உள்ளான நபரை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கும் நபருக்கு பரிசு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. பொதுவாக மக்கள் விபத்து நேர்ந்தால் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பது மற்றும் போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது உள்ளிட்ட வேலைகளை மட்டுமே செய்து வருகின்றனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு முதல் அகவிலைப்படி உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
விபத்துக்குள்ளான நபரை காப்பாற்றும் எண்ணம் பெரும்பாலும் யாருக்கும் வருவதில்லை என்றே கூறலாம். அதனால் அந்த நிலையை மாற்றி மக்களுக்கு உதவும் எண்ணத்தை வரவழைக்கும் விதமாகவும், உதவும் நபரை ஊக்குவிக்கும் விதமாகவும் தமிழக அரசு பரிசு வழங்க முடிவு செய்துள்ளது. அதாவது விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பொன்னான நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கும் நபருக்கு ரூ.5000 பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் போலீஸ் வேலைக்கு 11,812 பேர் தேர்வு – TNUSRB அறிவிப்பு!
ஒரு ஆண்டில் 5 முறை ஓர் நபருக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். அதாவது சாலை விபத்து நடந்த பின் காவல்துறையினர் அவ்விடத்தை பார்வையிட்டு விபத்தின் தன்மை குறித்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு தகவல் அளித்துவிடுவார்கள். பின்னர் அனைத்து விபத்துகளும் மாவட்ட ஆட்சியரின் தலைமையின் கீழ் இயங்கும் மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும். அதனை தொடர்ந்து இது குறித்த அனைத்து விபரங்களும் ரூ.5000 பரிசுத்தொகை வழங்கப்படும் போக்குவரத்து துறை ஆணையருக்கு பரிந்துரை செய்யப்படும்.