தமிழக அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு முதல் அகவிலைப்படி உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வரும் புத்தாண்டு நாள் முதல் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய மற்றும் மாநில அரசுகள் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கியது. மத்திய அரசை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்கள் தங்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது குறித்து நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
தமிழகத்தில் வருமானவரி செலுத்துபவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது – அரசுக்கு கண்டனம்!
இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்று, நிதி நிலை அறிக்கையில் 2022ம் ஆண்டின் ஏப்ரல் மாதம் முதல் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சட்டசபையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் 110 விதியின் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது பல்வேறு அரசு ஊழியர்களின் வேண்டுதலுக்கு இணங்க நிதி நெருக்கடி நிலவி வரும் இந்நிலையிலும் ஏப்ரல் மாதம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி 2022 ஜனவரி 1ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Airtel vs Jio vs VI நிறுவனங்களின் டாப் ரீசார்ஜ் பிளான்கள் – முழு விபரம் இதோ! பயனர்கள் கவனத்திற்கு!
ஆகவே தமிழக அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த அகவிலைப்படி உயர்த்துவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.6,480 கோடி கூடுதல் பணிச்சுமை ஏற்படும் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் 16 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.