தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் 10, 11ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – விபரங்கள் பதிவேற்றம்!

0
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் 10, 11ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - விபரங்கள் பதிவேற்றம்!
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் 10, 11ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - விபரங்கள் பதிவேற்றம்!
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் 10, 11ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – விபரங்கள் பதிவேற்றம்!

நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியலை, எமிஸ் விபரங்களின் அடிப்படையில் தயாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் மாணவரின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம் உள்ளிட்ட 12 விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

10, 11ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு

கடந்த ஆண்டு கொரோனா நோய் காரணமாக 10,11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது நடக்க இருக்கும் நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுத இருக்கும் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியலை ‘எமிஸ்’ என்ற விபரங்களின் அடிப்படையில் தயாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இதற்கான பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே ‘எமிஸ்’ இணையதளத்தில் மாணவர்களின் விபரம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொழில் சாரா சமூக வல்லுநர் 39 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்த ‘எமிஸ்’ இணையதளம் , தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பாலினம், ஜாதி, மதம் மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர், மாற்றுத்திறனாளி வகை, மொபைல் போன் எண், பாட தொகுப்பு, பயிற்று மொழி, மாணவர்களின் வீட்டு முகவரி உள்ளிட்ட 12 விபரங்களை சேகரித்து வைத்துள்ளது. இந்த விபரங்களை டிசம்பர் 4ம் தேதிக்குள், ‘எமிஸ் டிஜிட்டல்’ தளத்தில், பள்ளிகள் சார்பில் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் இந்த ‘எமிஸ்’ இணையதளத்தில் உள்ள பெயர் பட்டியலின் அடிப்படையில் மதிப்பெண் சான்று அச்சிடப்படும்.

தமிழக அரசு, தனியார் பள்ளி தலைமை & உடற்கல்வி ஆசிரியர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

அதன் பின் பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் விபரங்களில் தவறு ஏற்பட்டால், வகுப்பாசிரியர் மற்றும் தலைமையாசிரியரே பொறுப்பேற்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மாணவர்கள் தமிழ் வழியில் கல்வி பயின்றவாரா அல்லது ஆங்கில வழியில் கல்வி பயின்றவாரா என்ற விபரத்தையும் குறிப்பிட வேண்டும் எனவும் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் இதற்கு முறையான ஆவணங்கள் மாணவர்களிடம் இல்லாதலால் ‘எமிஸ்’ இணையதளத்தில் பதிவு செய்ய முடியவில்லை என்று ஆசிரியர்கள் வருத்தம் தெரிவிக்கின்றன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!