தமிழகத்தில் மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு? ஓமிக்ரான் பரவல்! பொதுமக்கள் அச்சம்!
தமிழகத்தில் மீண்டும் ஓமிக்ரான் பரவல் அதிகமாக பரவி வரும் நிலையில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த நிலையில் பல நாடுகளில் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மால்கள், கடற்கரை பகுதிகளில் மக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து ஓய்வெடுத்த மீனா ஹேமா – ஆன்மீக சுற்றுலா!
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த தொற்று கண்டறியப்பட்டு சில வாரங்களில் ஏராளமான நாடுகளுக்கு பரவி உள்ளது. இந்தியாவிலும் பரவ தொடங்கிய இந்த தொற்று தற்போது பல மாநிலங்களில் வேகமெடுத்து வருகிறது. அதனால் மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்கி உள்ளன. கேரளாவில் புத்தாண்டு வருவதை அடுத்து இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் தமிழகம், மஹாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலங்கானா போன்ற மாவட்டங்களில் மொத்தம் 500க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒட்டுமொத்த பட்டியலில் தமிழகம் 7வது இடத்தில் இருக்கிறது. அண்டை மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்திலும் தொடர்ந்து வரும் பண்டிகை நாட்கள் காரணமாக ஊரடங்கு கடுமையாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம்.
டிச. 30 முதல் 4 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
மேலும் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும், இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும். கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு, வணிக வளாகங்களில் சில கட்டுப்பாடுகள், திரையரங்குகளில் கட்டுப்பாடுகள், பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் போன்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.