டிச. 30 முதல் 4 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
கேரள மாநிலத்தில் அதிகரித்து வரும் ஓமைக்ரான் தொற்றின் பாதிப்பு காரணமாக டிசம்பர் 30 வியாழன் முதல் ஜனவரி 2, 2023 ஞாயிறு வரை மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு உத்தரவை அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஊரடங்கு உத்தரவு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இருக்கும் என்று அறிவித்துள்ளது.
இரவு ஊரடங்கு உத்தரவு:
நாட்டில் பல மாநிலங்களில் ஓமைக்ரான் தொற்றின் பாதிப்பு பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், தேவையான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட அளவில் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்ட மக்கள் எண்ணிக்கை, கட்டுப்பாட்டு மண்டலங்களை அறிவித்தல், கட்டுப்பாட்டு மண்டலங்களின் சுற்றளவு நிர்ணயித்தல் போன்ற தொடர்பான முடிவுகளை மாவட்ட அளவில் திட்டமிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஆலோசனைக்குப் பிறகு கர்நாடகா, டெல்லி, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளன. இந்நிலையில் கேரள மாநிலத்தில் டிசம்பர் 26ம் தேதி நிலவரப்படி ஓமைக்ரான் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஓமைக்ரான் வழக்குகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு அனைவரும் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் சரியாக முகக்கவசங்களை அணிய வேண்டும், சமூக விலகல் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் மற்றும் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும்.
TNPSC குரூப் 4 VAO தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!
மேலும் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், கோவிட்-19 அறிகுறிகளைக் கண்டறிந்தால், உடனடியாக சுகாதாரப் பணியாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது. இதனால் கேரள அரசு டிசம்பர் 30, வியாழன் முதல் ஜனவரி 2, 2023 ஞாயிறு வரை மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. கடைகள் மற்றும் நிறுவனங்களை இரவு 10 மணிக்கு மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், காரணமின்றி பொது இடங்களில் கூட வேண்டாம் என்றும் கேரள அரசு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.