10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 12 ல் வெளியீடு – கல்வித்துறை அறிவிப்பு!
ஆண்டுத்தேர்வுகள் முடிந்து, மாணவர்கள் தற்போது கோடை விடுமுறையைக் கழித்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியிடப்படவுள்ளது என, அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி தெரிவித்தார்.
கல்வித்துறை அறிவிப்பு:
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வந்தன. மேலும் கடந்த ஆண்டுகளில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எதுவும் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாத இறுதியில் இருந்து கொரோனா பரவல் குறைந்ததால், மீண்டும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. நடப்பு ஆண்டு கட்டாயமாக அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
இதன் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டு, கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கேரளா மாநிலத்திலும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. மேலும் விடுமுறை முடிந்து கேரளா பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. மேலும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 15, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 20 ல் வெளியிடப்படும் என முன்னதாக கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி அறிவித்திருந்தார். இருப்பினும் தற்போது மற்றொரு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 10, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூன் 12 ல் வெளியிடப்பட உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி தற்போது தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “மாநிலத்தில் நுழைவு விழாவுடன் பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. மேலும் 12,986 பள்ளிகளில் நுழைவு விழா நடக்கிறது. இதையடுத்து 1ம் வகுப்பில் 4 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் வருகை தர வாய்ப்புள்ளது. எனவே பள்ளிகளில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். பள்ளிகளின் முன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அருகில் உள்ள கடைகளில் ஆய்வு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.