10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி எதிரொலி – 34 மாணவர்கள் தற்கொலை! கல்வியாளர்கள் அதிர்ச்சி!
ஆந்திர மாநிலத்தில் அறிவித்தபடி 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எந்தவொரு இடையூறுமின்றி நடைபெற்றது. இதனை தொடர்ந்து தற்போது இத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. இத்தேர்வில் ஏராளமானோர் தோல்வியடைந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு அதிர்ச்சியான தகவலும் வெளியாகியுள்ளது.
மாணவர்கள் கவனத்திற்கு:
இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி ஆந்திர மாநிலத்திலும் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. இதையடுத்து தேர்வு அட்டவணையில் அறிவித்தபடி பொதுத்தேர்வுகள் நடைபெற்றது.
ஜூன் 13ம் தேதி மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு கிடையாது – ஆசிரியர்கள் வருகை புரிய உத்தரவு!
அதன்படி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாத இறுதியில் நடைபெற்றது. இத்தேர்வை 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இதையடுத்து இத்தேர்வின் முடிவுகளுக்காக மாணவர்கள் காத்திருந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 6.15 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதி இருந்த நிலையில் இதில் 2 லட்ச மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அத்துடன் மாநிலத்தில் 71 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மோசமான தேர்வு முடிவுகளை கண்டதில்லை என்றும் இதற்கு முக்கிய காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் 10ம் வகுப்பு தேர்வு நடத்தப்படாது தான் என்றும் அம்மாநில கல்வி அமைச்சர் கூறியுள்ளார். மேலும் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து வரும் சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை மாநிலத்தில் 34 மாணவர்கள் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது.