ஜூன் 13ம் தேதி மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு கிடையாது – ஆசிரியர்கள் வருகை புரிய உத்தரவு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் ஜூன் 13ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் ஜூன் 15 அன்று வருகை புரிந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து முழு விவரத்தையும் இத்தொகுப்பில் பார்க்கலாம்.
பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு:
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையில் உள்ளனர். இந்நிலையில் கோடை விடுமுறை முடிவடைந்து புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் திறக்கப்பட உள்ளன. இந்த வகையில் தமிழகத்தில் வரும் ஜூன் 13ம் தேதி 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மேலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ந் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வகையில் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளிகளும் வரும் ஜூன் 13 மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” அஞ்சலி கண்மணிக்கு இன்று பிறந்தநாள் – வாழ்த்து சொன்ன வெண்பா!
இந்த அறிவிப்பின்படி, ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் போது ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் மட்டுமே பள்ளிக்கு வருகை தந்தால் போதும் என்றும், மாணவர்கள் 2 நாட்களுக்குப் பிறகு அதாவது ஜூன் 15 அன்று பள்ளிக்கு வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை தொடங்கும் முன்பே, ஜூன் 13ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்திருந்தது. இதற்கிடையில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு முன்பு, நோய்த்தடுப்பு நெறிமுறைகளை மேற்கொள்வதற்காக முதலில் ஊழியர்களை பள்ளிக்கு அழைக்க அரசு முடிவு செய்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது பள்ளி வளாகங்களை சுத்தப்படுத்துதல், வெப்பநிலை பரிசோதனைகள், முகக்கவசங்களை அணிதல் மற்றும் சமூக விலகல் உள்ளிட்ட அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றுமாறு மாநில கல்வி ஆணையர் சூரஜ் மாந்தரே பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இம்மாநிலத்தில் பள்ளிகளை சுத்தம் செய்யும் பணிகளும் ஏற்கனவே தொடங்கியுள்ளன. இதற்கிடையில் வெப்பச்சலனம் காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் விதர்பாவில் உள்ள பள்ளிகள் ஜூன் 27 முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இந்த அறிவிப்பின்படி, மாணவர்கள் ஜூன் 27ம் தேதிக்கு முன் பள்ளிக்கு வரும்போது, ஊழியர்கள் அனைவரும் ஜூன் 24 முதல் பணிக்கு வந்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.