தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொதுத்தேர்வு விபரங்கள்!
ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு சரியாக பாடம் கற்பிக்காததால் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த குறைக்கப்பட்ட பாடத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
பொதுத்தேர்வு:
தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுமே மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. அதுமட்டுமல்லாமல் இரண்டு ஆண்டுகளுமே 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. இதற்கு முன்னால் வகுப்பில் இந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை கொண்டே பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கிடப்பட்டது. தமிழகத்தில் இந்தாண்டு கொரோனா பரவல் குறைந்துள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கண்டிப்பாக இந்தாண்டு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் நாளை (ஏப்.29) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – பட்டதாரிகள் கவனத்திற்கு!
அதே போல 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 6 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 ஆம் தேதியும் பொதுத்தேர்வு ஆரம்பமாக இருக்கிறது. ஆன்லைன் வழியாக சரியாக பாடம் கற்பிக்காததால் தற்போது வேக வேகமாக பொதுத்தேர்வுக்குரிய பாடங்கள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
மேலும், மாணவர்களின் சிரமத்தை குறைக்க 10-ம் வகுப்பு மாணவர்களின் பாட திட்டங்களில் இருந்து 39 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது மற்றும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 39 சதவீதம் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்டது போக மீதமுள்ள பாடங்கள் மட்டுமே மாணவர்களுக்கு நடத்தப்பட்டன. குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் மட்டுமே பொதுத்தேர்விற்கு கேட்கப்படுமா, எந்தெந்த பாடங்களைப் படிக்க வேண்டும் என மாணவர்கள் குழம்பியுள்ள நிலையில் குறைக்கப்பட்ட பாடத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.