தமிழகத்தில் நாளை (ஏப்.29) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – பட்டதாரிகள் கவனத்திற்கு!

0
தமிழகத்தில் நாளை (ஏப்.29) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - பட்டதாரிகள் கவனத்திற்கு!
தமிழகத்தில் நாளை (ஏப்.29) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - பட்டதாரிகள் கவனத்திற்கு!
தமிழகத்தில் நாளை (ஏப்.29) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – பட்டதாரிகள் கவனத்திற்கு!

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் நடத்தும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருநெல்வேலியில் நடைபெறவுள்ளது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு முகாம் :

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் வேலையின்மை விகிதம் வரலாறு காணாத அளவில் அதிகரித்து வந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட நாடு தழுவிய முடக்க நிலையால் இந்தியாவின் வேலையின்மை விகிதம் திடீரென சீறிப் பாய்ந்தது. பெரும்பாலான நாடுகளில் 2020ஆம் ஆண்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் இந்தியாவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை, மற்ற பல வளரும் நாடுகளை விட உயர்வாக உள்ளன. கொரோனா முடக்க நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் வேலையின்மை உச்ச நிலையில் இருந்தது. தற்போது கொரோனா கட்டுக்குள் வந்து உள்ளதால் தமிழக அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அமைத்து தர பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு – போக்குவரத்தில் மாற்றம்! முழு விபரங்கள் இதோ!

அந்த வகையில் அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வு அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (29.04.2022|) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருநெல்வேலியில் வைத்து நடைபெறவுள்ளது. இம்முகாமில் பணிநியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்வி சான்று மற்றும் இதர சான்றுகளுடன் பங்கேற்று பயனடையலாம்.

Exams Daily Mobile App Download

இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் மற்றும் பங்கேற்கவிருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் தனியார் வேலை இணையத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) தங்களது விவரங்களை பதிவு செய்தல் வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு தகவல்களை பெறவும், முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் குறித்து அறியவும் NELLAI EMPLOYMENT OFFICE என்ற Telegram Channel-ல் இணைந்து பயன்பெறலாம். மேலும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைபிடிக்குமாறும் கா.ஹரிபாஸ்கர், உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருநெல்வேலி அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!