TNPSC குரூப் 2 & 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு – தமிழ் வழி கற்றல் சான்றிதழ்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுகளில் தமிழ்வழி கற்றல் சான்றிதழுடன் விண்ணப்பித்தால் முன்னுரிமை வழங்கப்படும். அதனால் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் தமிழ்வழி கற்றல் சான்றிதழுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
தமிழ்வழி கற்றல் சான்றிதழ்
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பதவிகளில் நியமிக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் குரூப் 2 தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெற உள்ளது.
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – பதவி வாரியாக காலிப்பணியிடங்கள்!
இதில் 5000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வும் வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதிலும் 7301 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வு நடைபெற உள்ளதால் இத்தேர்வுக்கு தற்போது பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். அத்துடன் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை TNPSC தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது.
மேலும் தற்போது TNPSC நடத்தும் அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ்மொழி தகுதித்தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சமாக 40 மதிப்பெண்கள் எடுத்தால் தான் அடுத்த தாள் மதிப்பீடு செய்யப்படும். இதையடுத்து தமிழ்வழி கற்றல் சான்றிதழுடன் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதனால் தற்போது பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்ற மாணவர்கள் தமிழ்வழி கற்றல் சான்றிதழுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்த விண்ணப்பங்களை பள்ளி ஆசிரியர்கள் சரிபார்த்த பின் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.