முல்லையின் சிகிச்சைக்காக மீனாவின் அப்பாவிடமிருந்து திருடிய ஜீவா – அதிர்ச்சியில் குடும்பத்தினர்கள்!
செயற்கை முறையில் குழந்தை பெற்றெடுக்க 5 லட்ச ரூபாய் செலவாகும் என மருத்துவர் கூறியதை தொடர்ந்து ஜீவா அந்த பணத்தை ரெடி பண்ணுகிறார். பின்பு, சூப்பர் மார்க்கெட்டில் இருந்து தான் ஜீவா அந்த பணத்தை திருடிவிட்டார் என ஜனார்த்தனன் குற்றம் சாட்டும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. செயற்கை முறையில் சிகிச்சை எடுக்க பணத்தை எப்படி ரெடி பண்ண போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என மருத்துவர் கூறியதை தொடர்ந்து செயற்கை முறையில் வேண்டுமானால் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என மருத்துவர் கூறிவிடுகிறார்.
ராதிகாவை வெளுத்து வாங்கிய பாக்கியா – மிரண்டு போன கோபி! சீரியலில் புதிய திருப்பம்!
ஆனால் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள நிறைய செலவாகும் என்பதால் தற்போதைக்கு வீடு கட்டும் பிளானை நிறுத்தி வைக்கலாம் என மூர்த்தி கூறிவிடுகிறார். வீடு கட்டுவதை நிறுத்தலாம் என மூர்த்தி கூறியதும் மீனாவிற்கு கோவம் வந்துவிடுகிறது. அதாவது அனைவருக்கும் சொந்தமான வீட்டை முல்லைக்காக மட்டும் எப்படி விட்டுக் கொடுக்க முடியும் என கூறி மீனா சண்டை போடுகிறார். மேலும், செயற்கை முறை கருவுறுதலுக்கு ரூ.5 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர் கூறுகிறார். கதிர், நான் அந்த பணத்தை ரெடி பண்ணி தருகிறேன், வீடு கட்டுவதையெல்லாம் நிறுத்த வேண்டாம் என கூறுகிறார்.
அதே போல கதிர் சொன்னபடி 5 லட்ச ரூபாய் பணத்தை ரெடி செய்கிறார். அந்த பணம் எப்படி வந்தது என குடும்பத்தினர்கள் கேட்டபோது எனது நெருங்கிய நண்பனிடம் இருந்து வாங்கினேன் என கூறிவிடுகிறார். அதன் பிறகு மீனாவின் அப்பாவான ஜனார்தனன் கடையில் இருந்து 5 லட்ச ரூபாய் காணாமல் போய்விடுகிறது. இந்த பணத்தை ஜீவா தான் எடுத்தார் என ஜனார்த்தனன் சண்டை போடும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இத்தனை பிரச்சனைகளையும் தாண்டி முல்லைக்கு குழந்தை பிறக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.