முடிவுக்கு வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்? விரைவில் சீசன் 2 தொடக்கம்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவியில் அண்ணன் தம்பிகளின் பாசத்தை விளக்கும் வகையில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இரண்டாம் பாக கதை விளக்கமும் வெளியாகியுள்ளதை பற்றி தெளிவாக இப்பதிவில் பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகம்:
சீரியல் என்றாலே அடுத்தவர் குடும்பத்தை கெடுக்க நினைக்கும் வில்லிகள், பரம எதிரிகளை அழிக்க துடிக்கும் வில்லன்கள், மாமியார் மருமகள் சண்டை என அறுத்ததையே அறுக்காமல் புதிதாக அண்ணன் தம்பிகளின் பாசம், அம்மா போன்ற அண்ணியின் அளவுகடந்த அன்பு, மருமகள்களின் ஒற்றுமை, குடும்பத்தை கெடுக்க குடும்பத்தில் உள்ளவர்களே வில்லியாக வலம் வரும் உண்மை நிகழ்வுகளை மிகவும் அழகாக ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். இந்தியாவில் மொத்தம் 8 மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தமிழில் அமோக வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது.
செம்பருத்தி ஷபானா நடிப்பில் விஜய் டிவியில் ‘செல்லப்பிள்ளை’ புது சீரியல் – ரசிகர்கள் உற்சாகம்!
இத்தொடரில் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விஜய் டிவியில் கடந்த 3 வருடமாக வெற்றி பாதையில் மிகவும் அழகாக இயக்கி வரும் இயக்குனர் சிவா சேகர் தற்போது சின்ன மளிகை கடையிலிருந்து பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வரை கதைக்களத்தை விறுவிறுப்பாக காட்டி முடித்துவிட்டார். இனி என்ன காட்ட உள்ளது என்பதற்காகவே இந்த சீரியலின் கதையை முடித்து விட்டு இரண்டாம் பாகம் தொடங்க முடிவெடுத்துள்ளார்.
அதில் கதிர் வேறொரு பெண்ணை திருமணம் செய்வது, முல்லை கதிரின் பிரிவைத் தாங்க முடியாமல் கதறுவது என இருவரையும் பிரித்து பகடைக்காய் ஆட்டத்தை ஆடுவது போன்று இரண்டாவது சீசனில் காட்டுவதற்க்கு முடிவெடுத்துள்ளார். இவ்வாறு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இரண்டாம் பாகத்தை சின்னத்திரை ரசிகர்கள் முல்லையை ஒதிக்கி கதிர் வேறு ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்வது எதனால் என்பதை அறிந்து கொள்வதர்காகவே ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.