பாக்கியாவின் கணவர் தான் கோபி என்பதை அறிந்துகொள்ளும் ராதிகா – ப்ரோமோ ரிலீஸ்!
கோபியை பற்றிய உண்மைகள் ராதிகாவிற்கு எப்போது தெரியவரும் என எதிர்பார்த்த சமயத்தில் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொண்டு கோபியை விட்டு விலகுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியா தான் கோபியின் கணவர், இத்தனை நாட்களாக கோபி பொய் சொல்லி ஏமாற்றியிருக்கிறார் என்கிற விஷயம் ராதிகாவிற்கு எப்போது தான் தெரியவரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். குடும்பத்தில் உள்ள யாருமே என்னை கவனிப்பதில்லை. என் மனைவிக்கு சம்பாதித்து பணம் கொடுத்தால் மட்டும் போதும். நான் படும் கஷ்டமெல்லாம் அவளுக்கு தெரியாது. பிள்ளைகளும் என்னை கவனிப்பதில்லை என கூறி தான் ராதிகாவை கோபி காதலிக்க வைத்தார்.
இனி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லையாக களமிறங்கும் பிரபல நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி!
கோபி கூறியது அனைத்தும் உண்மை என ராதிகா தற்போது வரைக்கும் நம்பி கொண்டிருக்கிறார். ராதிகா மட்டும் அல்லாமல் பாக்கியாவும் கோபி உத்தமன் என நினைத்து கொண்டிருக்கிறார். பாக்கியா பக்கத்தில் படுத்திருக்கும் போது கூட ராதிகாவிடம் போனில் பேசி கொண்டிருக்கிறார். ராதிகாவும் பாக்கியாவும் நெருங்கிய நண்பர்கள் என்பது மட்டுமே கோபிக்கு மிக பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இதனால் எப்படியாவது ராதிகாவையும் பாக்கியாவையும் பிரித்தே தீர வேண்டும் என கோபி திட்டம் போட்டு கொண்டிருக்கிறார். இதற்கு இடையே கல்யாண வேலைகளையும் கோபி கவனித்து கொண்டிருக்கிறார்.
Exams Daily Mobile App Download
தற்போது ராதிகாவிற்கும் கோபி மீது சந்தேகம் வர துவங்கியுள்ளது. பாக்கியா கிட்ட தான் தூங்கி கொண்டிருந்தாலும் ராதிகாவிடம் கோபி கால் செய்து பேசுகிறார். கோபி பேசுவது பாக்கியாவிற்கு கேட்டு விடுகிறது. பின்பு, பாக்கியா ஏன் தினமும் அதுவும் இந்த நேரத்தில் போன் பேசுகிறீர்கள் என கேட்கிறார். உடனே கோபி பயந்து என் நண்பனிடம் தான் பேசுவேன் வேறு எதுவும் இல்லை என கூறி சமாளிக்கிறார். பின்பு, ராதிகாவும் விடாமல் கோபிக்கு கால் செய்துகொண்டே இருக்கிறார். பாக்கியாவிடம் மாட்டிவிடுவோம் எனபயந்து போனை சுவிட்ச்ஆப் செய்துவிடுகிறார். இவர் தான் நமக்கு கால் செய்தார். இப்போ ஏன் சுவிட்ச்ஆப் செய்துவிட்டார் என நினைக்கிறார். பின்பு, கோபி ஏதோ தவறு செய்கிறார் என ராதிகாவிற்கு சந்தேகம் வருகிறது. தற்போது கோபியை பற்றிய அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொண்டு கோபியை விட்டு விலகுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.