இனி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லையாக களமிறங்கும் பிரபல நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் சில வாரங்களாக முல்லை கதிரை பற்றியே கதை இருக்கிறது. இப்படி பரபரப்பான கதைக்களத்தில் முல்லையாக நடித்து வரும் காவ்யா அறிவுமணி சீரியலை விட்டு விலக இருப்பதாகவும் அவருக்கு பதிலாக நடிகை ஆலியா மானசா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பத்துடன் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் பல கதாபாத்திரங்கள் இணைந்து ஒரே வீட்டில் ஒற்றுமையாக எப்படி வாழ்ந்து வருகிறார்கள் என்பதை பற்றியே எபிசோடுகள் கொண்டு செல்லப்படுகிறது. மூன்று அண்ணன்களும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை கவனித்து வர அதை வைத்து குடும்பத்தில் பல சுபகாரியங்கள் நடக்கிறது. குடும்பமே சந்தோசமாக இருந்தாலும் முல்லைக்கு குழந்தை இல்லை என்ற கவலை.
பாக்கியலட்சுமி தொடரின் முன்னாள் ராதிகாவான ஜெனிபரின் மகனா இது? வைரலாகும் புகைப்படம்!
மருத்துவ பரிசோதனையில் முல்லைக்கு குழந்தை இயற்கையாக பிறக்காது என சொல்ல அதனால் செயற்கை முறையில் கர்ப்பமாக டிரீட்மென்ட் எடுக்கின்றனர். அதற்கு நிறைய பணம் செலவாக ஆனால் முல்லையின் சந்தோசம் தான் முக்கியம் என்பதால் குடும்பத்தில் அனைவரும் தியாகம் செய்கின்றனர். ஆனால் எதிர்பாராத விதமாக முல்லைக்கு அது நடக்காமல் போகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இதே எபிசோடுகள் தான் காட்டப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
முல்லைக்கு குழந்தை பிறக்காது என தெரிந்து ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர். இப்படி முல்லை கதாபாத்திரத்தை மையமாக வைத்தே கதை கொண்டு செல்லப்படும் இந்த நேரத்தில் முல்லையாக நடித்து வரும் காவ்யா அறிவுமணி சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்கு பதிலாக நடிகை ஆலியா மானசா என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் இருக்கின்றனர்.