எல்பிஜி கேஸ் சிலிண்டருக்கான மானியம் கிடைக்கவில்லையா? இதை உடனே செய்யுங்கள்!
நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு ஒரு ஆண்டுக்கு மட்டுமே 12 சிலிண்டர்கள் வரைக்கும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மானியம் கிடைக்காதவர்கள் கண்டிப்பாக ஆதார் கார்டுடன் சிலிண்டர் இணைப்பை இணைந்துளீர்களா என்பதை கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிலிண்டருக்கான மானியம்
நாட்டில் உள்ள அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் சமையல் எரிவாயு இணைப்புகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. அவ்வப்போது எல்பிஜி சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டு கொண்டே இருக்கிறது. இந்த ஒரு ஆண்டில் மட்டும் நான்கு முறை சிலிண்டரின் விலை உயர்ந்துவிட்டது. வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் 14.2 கிலோ கொண்ட சமையல் சிலிண்டர்களுக்கு மானியம் அரசு தரப்பிலிருந்து மக்களுக்கு வழங்கப்படுகிறது. அதாவது ஒரு ஆண்டிற்கு மட்டுமே 12 சிலிண்டர்கள் வரைக்கும் ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!
12 சிலிண்டர்களுக்கு மேல் வாங்க விரும்புவர்கள் சந்தை விலையில் சிலிண்டரை வாங்கிக்கொள்ளலாம். இதன் பின்னர் இந்த கொரோனா காலகட்டத்திலிருந்து இரண்டு ஆண்டுகளாகவே சிலிண்டர்களுக்கு அரசு மானியம் வழங்கவில்லை. சிலிண்டர்களுக்கு இனிமேல் மானியம் வழங்கப்படாது என அரசு தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் மக்கள் அனைவரும் சிலிண்டர்களுக்கான மானியம் கிடைக்கும் என வங்கி கணக்கில் அவ்வப்போது சரி பார்த்துக் கொண்டே இருந்தனர்.
Exams Daily Mobile App Download
இதன் பிறகு சென்ற ஆண்டின் மத்தியில் இருந்து சிலருக்கு மட்டும் மானியம் பணம் வரத் துவங்கியது. சில காரணங்களுக்காக சிலிண்டருக்கான மானிய தொகை கிடைக்காமல் போயிருக்கலாம். அதாவது ஆதார் கார்டு சிலிண்டர் கணக்குடன் கண்டிப்பாக இணைத்து இருக்க வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் எளிமையாக ஆதார் கார்டுடன் சிலிண்டர் கணக்கை இணைத்துக்கொள்ளலாம். போன்கள் மூலமாக இணைப்பதற்கு 18000-2333555என்ற நம்பருக்கு கால் செய்து ஆதார் கார்டு மற்றும் சிலிண்டர் விவரங்கள் அனைத்தையும் வழங்கி இணைத்து விடலாம்.