தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தினால் ஒரு சில இடங்களில் மிதமான மழை மற்றும் கனமழையும், ஒரு சில இடங்களில் சூறாவளி காற்றும் அடிக்க கூடும் என்ற தகவலும், இதனால் மீனவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை விடுப்பு பற்றியும் சென்னை வானிலை ஆய்வு துறை வெளியிட்டுள்ளது.
வானிலை தகவல்:
தமிழகத்தின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று ஜூன் 12 தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல்,ஈரோடு, சேலம், திருப்பூர், தேனி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம் – கல்வித்துறை விளக்கம்!
இதை தொடர்ந்து நாளை ஜூன் 13 மற்றும் ஜூன் 14, 15, 16ந் தேதிகளிலும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், அந்நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்றைய நாளான ஜூன் 12 மற்றும் 13அன்று இலட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக்கடல், கேரளா மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 இலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.