தமிழகத்தில் ஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
தமிழகத்தில் முக்கிய ஆவணங்களில் ஒன்றாகவும், இருப்பிட சான்றாகவும் கருதப்படும் ஆன்லைன் மூலமாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான எளிய வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
ரேஷன் கார்டு:
தமிழகத்தில் மாநில அரசால் வழங்கப்படும் ரேஷன் கார்டு மூலம் ஏழை, எளிய மக்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் முக ஸ்டாலின் ரேஷன் கடைகள் மூலம் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.
மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – அரசின் சூப்பரான அறிவிப்பு!
அந்த வகையில் 1000 ரூபாய் உதவித்தொகை அறிவிக்கப்பட்டவுடன் புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதற்காக மக்கள் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய நிலை நேர்ந்தது.
இந்த நேரத்தில் ஆன்லைன் வாயிலாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் எதிர்பாராத விதமாக உங்கள் ரேஷன் கார்டு தொலைந்து விட்டால் கூட ந்த வகையில் புதிய ரேஷன் அட்டை நகலை ஆன்லைனில் விண்ணப்பித்து வாங்கலாம்.
ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முறைகள்:
- முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இனையதளத்தில் பயனாளர் IDஐ பதிவிட்டு உள் நுழைய வேண்டும்.
- பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை பதிவு செய்து சுயவிவர பக்கத்தில் உள்நுழைய வேண்டும்.
- இப்போது TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான பக்கம் திறக்கும் அதில் உங்களின் விவரங்களை நிரப்பவும்.
- அதை PDF ஆக சேமித்து வைத்து கொண்டு பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த பிடிஎப் படிவத்தை பிரிண்ட் உணவு வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று இந்த நகலை சமர்ப்பித்தால், மீண்டும் புதிய ரேஷன் கார்டு கிடைக்கும்.