மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – அரசின் சூப்பரான அறிவிப்பு!

0
மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அரசின் சூப்பரான அறிவிப்பு!
மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அரசின் சூப்பரான அறிவிப்பு!
மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – அரசின் சூப்பரான அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு மாநிலங்களும் தங்களின் அரசு ஊழியர்களுக்கு வழங்க முன் வந்துள்ளன. அந்த வகையில் தற்போது குஜராத் மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதனால் 2020ம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு 28% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து மீண்டும் கடந்த ஜூலை மாதம் 3% அகவிலைப்படி 31% அகவிலைப்படி பெற்று வந்தனர். இதையடுத்து இந்த ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.

வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிடங்களில் கார் லோன் – HDFC வங்கியின் அதிரடி அறிவிப்பு!

அதன்படி தற்போது 34% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இதேபோல் பல்வேறு மாநிலங்களும் தங்களின் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கி வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மற்றும் இமாச்சலப் பிரதேச உள்ளிட்ட மாநிலங்கள் தங்களின் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளனர். இந்த வரிசையில் தற்போது குஜராத் மாநிலமும் இணைந்துள்ளது. குஜராத் அரசு தனது அறிவிப்பில் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் இந்த அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை 1 முதல் கணக்கிடப்பட்டுள்ளது. இதனை வருகிற மே 1ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அன்றைய தினம் தான் குஜராத் மாநிலம் உருவான நாள் என்பதால் இத்தினத்தில் அமல்படுத்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அத்துடன் அகவிலைப்படிக்கான 10 மாத தவணையை 2 தவணையாக வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் முதல் தவணையை இந்த மே மாதத்திலும், 2ம் தவணையை ஜூன் மாதத்திலும் வழங்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் குஜராத் மாநில அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!