தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
புதிய ரேஷன் வாங்க என்ன செய்ய வேண்டும், என்னென்ன ஆவணங்கள் தேவை, எப்படி விண்ணப்பிப்பது, எப்போது கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
புதிய ரேஷன் கார்டு
ரேஷன் கார்டு என்பது ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும் அட்டையாகும். இதை வைத்து ரேஷன் கடைகளில் இலவசமாகவும் அல்லது மலிவு விலையிலும் உணவுப் பொருட்களை வாங்கலாம். நிதியுதவி போன்ற அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு ரேஷன் கார்டு பயன்படுகின்றன.
ஜூன் 11 முதல் 4 நாட்களுக்கு விடுமுறை – அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
புதிய சிலிண்டர் வாங்கவும், முக்கிய ஆவணமாக ரேஷன் கார்டு தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட ரேஷன் கார்டு வாங்க சில வழிமுறைகள் உள்ளன. இது குறித்த விவரத்தை இந்த பதிவில் பார்ப்போம்.
1. முதலில் இருப்பிடச் சான்று மற்றும் அடையாள ஆதார் அட்டை தேவை.
2. முகவரிச் சான்றாக சிலிண்டர் பில் கொடுக்க வேண்டும். பொதுவாக மூன்று மாதங்களுக்குள் சிலிண்டர் எடுத்திருக்கும் பில் வேண்டும்.
3. புதிதாக திருமணம் ஆனவர்களாக இருந்தால் தங்களது பெற்றோரின் ரேஷன் கார்டில் இருந்து பெயரை நீக்க வேண்டும்.
4. பின்பு, இவர்களின் திருமண பத்திரிகை அல்லது திருமண சான்றிதழ் தேவை.
5. இருவரின் பெயரும் நீக்கிய பின்னர் புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமின்றி, புதிய கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர் சிலிண்டர் இணைப்பு வாங்கிவிட வேண்டும்.
6. புதிய ரேஷன் கார்டை விண்ணப்பிக்க அரசின் அனைத்து இ-சேவை மையங்களில் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொதுச் சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: யார் வேண்டுமானாலும் தங்கள் மொபைல் மூலமாக விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. ஆனால் இ-சேவை அல்லது பொதுச் சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பித்தால் எவ்வித சிரமும் அலைச்சலும் இல்லாமல் ரேஷன் கார்டு வாங்கலாம் என தெரிவித்துள்ளது. ரேஷன் கார்டு விண்ணப்பித்த பின்னர் 20 நாட்களில் ஒப்புதல் அளிக்கப்படும் என்றும், 2 மாதங்களில் ரேஷன் அட்டை வழங்கப்படும் மற்றும் டெலிவரி செய்யப்பட்டது என அனைத்து தகவல்களும் SMS மூலமாக ரேஷன் கார்டில் குறிப்பிடப்பட்ட மொபைல் நம்பருக்கு அனுப்பப்படும் என தெரிவித்துள்ளது.