கர்ப்பமான முல்லை, மகிழ்ச்சியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர் – சீரியலில் அடுத்த திருப்பம்!
முல்லைக்கு செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை வெற்றியை கொடுக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்த நேரத்தில் முல்லைக்கு செயற்கை முறை சிகிச்சை வெற்றியடைவது போன்றும், முல்லை கர்ப்பமாக இருப்பது போன்றும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. முல்லைக்கு இந்த வாரம் செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை நடைபெற இருப்பதால் அந்த சிகிச்சை வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். முல்லையால் இயற்கையாக கருவுறமுடியாது என்பதை தொடர்ந்து செயற்கை முறையில் வேண்டுமானால் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என குடும்பத்தினர்கள் முடிவு செய்கின்றனர்.
Exams Daily Mobile App Download
செயற்கை முறை கருவுறுதலுக்கு தேவையான 5 லட்சத்தை எப்படியோ மூர்த்தியும் ஜீவாவும் சேர்ந்து ரெடி செய்கிறார்கள். ஆனால், இந்த செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை கண்டிப்பாக வெற்றியை கொடுக்குமா என்பதை கூற முடியாது என்று மருத்துவர் கூறுகிறார். ஒருவேளை செயற்கை முறை சிகிச்சை தோல்வி அடைந்துவிட்டால் மீண்டும் 5 லட்சம் செலவு செய்து முதலில் இருந்து சிகிச்சையை தொடங்க வேண்டும். இந்த ஐந்து லட்சத்தை ரெடி செய்யவே குடும்பத்தில் உள்ள அனைவரும் மிகவும் கஷ்டப் பட்டிருக்கிறார்கள்.
விஜய் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளிய சன் டிவியின் “கயல்” – ரசிகர்கள் வாழ்த்து மழை!
மீண்டும் ஐந்து லட்சத்தை எப்படி ரெடி செய்வது எனபது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினருக்கு நடக்காத ஒன்று. இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் பயத்தில் உள்ளனர். இந்த வாரத்தில் இருந்து முல்லைக்கு செயற்கை முறை சிகிச்சை தொடங்க இருக்கிறது. எப்படியாவது இந்த சிகிச்சை வெற்றி பெற வேண்டும் என குடும்பத்தில் உள்ள அனைவரும் வேண்டி கொண்டனர். இந்நிலையில், முல்லைக்கு செயற்கை முறை சிகிச்சை வெற்றியடைவது போன்றும், முல்லை கர்ப்பமாக இருப்பது போன்றும், குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைவது போன்றும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.