தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள்!

0
தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள்!
தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள்!
தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள்!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்க இருக்கும் நிலையில், பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகளில் மாவட்ட நிர்வாகங்கள் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றன.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டு காலமாக கொரோனா பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்க பட்ட நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் பரவியதால் இரண்டு வருடமாக மாணவர்களுக்கு தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில் மட்டுமே 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்களை நடத்தி வந்தனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு – பிட்மென்ட் ஃபேக்டர் அதிகரிப்பு?

மாணவர்களுக்கு அதிகமான விடுமுறை விடப்பட்டதால் சனிக்கிழமைகளில் கூட விடுமுறை விடுபடாமல் பள்ளிகள் செயல்படுத்தப்பட்டன. தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் பொதுத் தேர்வுகளை மே மாதத்தில் நடத்தினர். இந்நிலையில், வரும் ஜூன் 13ம் தேதி 1 முதல் 10ம் வகுப்புகள் திறக்க இருக்கும் நிலையில், தமிழகம் முழுவதும் பள்ளி வளாகத்திற்குள் படர்ந்திருக்கும் மரம், செடிகளை அகற்றப்பட்டு வகுப்பறையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றன. மேலும்,நிர்வாகத்தினர் மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

அதுமட்டுமின்றி, அரசு பள்ளி வாகனங்களில் ஏதேனும் கோளாறு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யுமாறு போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவுவிட்டுள்ளது. வாகனங்களில் குறிப்பிட்ட இடத்தில் சி.சி.டி.வி. கேமரா இருக்கிறதா, மாணவர்கள் ஏறும் வழி, இறங்கும் வழிகளில் உறுதியான கதவுகள் இருக்கிறதா என்று ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் வேகத்தடை கருவிகள் இருக்கிறதா, தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டி இருக்கிறதா என்பது பற்றியும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், வாகன ஓட்டுனர்கள் லைசென்ஸ், அவர்களின் வயது விபரம் உள்ளிட்டவற்றையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!