மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு – பிட்மென்ட் ஃபேக்டர் அதிகரிப்பு?
நீண்ட காலமாக ஊதிய உயர்வை எதிர்பார்த்து வரும் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் விரைவில் அதிகரிக்கப்பட இருப்பதாகவும், பிட்மென்ட் காரணியை 3.68 சதவீதமாக உயர்த்துவதற்கும் அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சம்பள உயர்வு
மத்திய அரசாங்கம் தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சமீபத்தில் 31% லிருந்து 34% ஆக அகவிலைப்படியை உயர்த்தியதை தொடர்ந்து அவர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் அதிகரிப்பதற்கான எதிர்பார்ப்புகள் இன்னும் அதிகமாக உயர்ந்துள்ளன. அதாவது, அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18,000 லிருந்து ரூ.26,000 ஆக உயர்த்த வேண்டும் என்றும் ஃபிட்மென்ட் பேக்டரை 2.57ல் இருந்து 3.68 மடங்கு உயர்த்த வேண்டும் என மத்திய அரசின் ஊழியர் சங்கங்கள் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.
வங்கிகளுக்கு செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – இன்றிலிருந்து ஜூன் 15 வரை விடுமுறை!
இப்போது ஊதிய உயர்வு தொடர்பாக வெளியாகி இருக்கும் பல ஊடக அறிக்கைகளின்படி, பிட்மென்ட் காரணியை அதிகரிக்க அரசாங்கம் விரைவில் ஒப்புதல் அளிக்கலாம் என்று தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அந்த வகையில் ஃபிட்மென்ட் காரணியை உயர்த்தி அரசு அறிவித்தால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும். தற்போது வரை மத்திய அரசு பணியாளர்கள் 2.57 சதவிகிதம் ஃபிட்மென்ட் காரணி அடிப்படையில் சம்பளம் பெறுகிறார்கள். இந்த காரணியை 3.68 சதவீதமாக அரசு உயர்த்தினால், ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.8,000 என உயரும்.
Exams Daily Mobile App Download
இதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.18,000 லிருந்து ரூ.26,000 ஆக உயரும். இப்போது ஃபிட்மென்ட் விகிதத்தை 3.68 சதவீதமாக மாற்றி அமைத்தால் அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.26,000 ஆக இருக்கும். மேலும் 2.57 ஃபிட்மென்ட் காரணியின்படி, உங்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 18,000 எனில் அலவன்ஸ்கள் இல்லாமல் ரூ.46,260 (ரூ. 18,000 X 2.57 = 46,260) சம்பளமாக பெறுவீர்கள். மேலும், ஃபிட்மென்ட் காரணி 3.68 ஆக இருந்தால் உங்கள் சம்பளம் ரூ 95,680 (26000 X 3.68 = 95,680) இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.