தமிழகத்தில் வியாழக்கிழமை (ஜூன் 9) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற வியாழக்கிழமை ஜூன் 9 அன்று கல்லிடைகுறிச்சி மின் கோட்டத்துக்கு உட்பட்ட சில பகுதிகளில் மின் நிறுத்தம் செய்ய போவதாக அந்த மாவட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் தகவல் வெளியிட்டுள்ளார்.
மின்தடை :
தமிழக திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற ஜூன் 9ந் தேதி கல்லிடைகுறிச்சியில் உள்ள விக்கிரமசிங்கபுரம் மற்றும் ஆழ்வார்குறிச்சி ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர மின்பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இப்பணியின் நிமித்தம் துணைமின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளுக்கு மின் தடை செய்யப்படும் என அம்மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
இவ்வாறு கல்லிடைகுறிச்சி மின் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளான விக்கிரமசிங்கபுரம் மற்றும் ஆழ்வார்குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் காரையாறு, சேர்வலார், பாபநாசம், வி.கே.புரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், ஆறுமுகபட்டி, முதலியார்பட்டி, ஆழ்வார்குறிச்சி, கருத்தபிள்ளையூர், ஏ.பி.நாடானூர், துப்பாக்குடி, கலிதீர்த்தான்பட்டி, பொட்டல்புதூர்.
Exams Daily Mobile App Download
ஆம்பூர், பாப்பான்குளம் ஆகிய பகுதிகளில் வருகிற வியாழக்கிழமை (ஜூன் 9) அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்பட இருக்கிறது. இந்த தகவலை கல்லிடைகுறிச்சி மின்விநியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் தெரிவித்து உள்ளார்.