தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முக்கிய அறிவிப்பு:

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் பள்ளிகள் சரியாக திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் கற்றல் முறையில் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்திலிருந்து தாக்கம் குறையத் தொடங்கியதால் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வருடமும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதத்தில் தொடங்குவது வழக்கம். அதனைத்தொடர்ந்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வும், பிற வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும். ஆனால், நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதால், பொதுத் தேர்வுகள் மே மாதம் இறுதி வரை நடைபெற்றது.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – முதல்வரிடம் கோரிக்கை!

மேலும் தற்போது மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13-ந்தேதியும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20-ந் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறந்ததும் முதல் 5 நாட்களுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதாவது தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர், செய்தியாளா்களிடம் பேசிய போது, தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

Exams Daily Mobile App Download

முதல் 5 நாட்கள் மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தைப் போதிக்கும் விதமாக வகுப்புகள் நடத்தப்படும். இதில், தன்னாா்வலா்கள், காவல்துறையினர் என பலரும் மாணவர்களுக்கு நல்லொழுக்கங்கள் குறித்து பாடம் எடுப்பா். அதன் பிறகு வழக்கம் போல வகுப்புகள் நடைபெறும். மேலும் SSLC மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதாத மாணவா்களுக்கு ஜூலை, செப்டம்பா் என துணைத் தோ்வு நடத்தப்படும். எனவே மாணவா்கள் அச்சம் இல்லாமல் தோ்வை எழுத முன்வர வேண்டும் என மாணவர்களுக்கு ஊக்கம் அளித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!