திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (ஜூன் 13) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை ஜூன் 13ந் தேதி திங்கட்கிழமை அன்று அய்யலூர் மற்றும் வடமதுரை மின் நிலையங்களில் உள்ள மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தால் காலை முதல் மதியம் வரை மின்தடை அமல்படுத்தப்படும் என அம்மாவட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மின்தடை:
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் பராமரிப்பு பணிக்காக ஒரு நாள் மின்தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏனென்றால் மின்கம்பங்களில் ஏற்படும் மின்கசிவு மற்றும் மின் பாதையில் நிகழும் சில பிரச்சனைகளால் விபத்துகள் நேரிடுகிறது. இவற்றை தவிர்ப்பதற்காகவே மாதம் ஒருமுறை பராமரிப்பு பணி கட்டாயமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு பணி நடைபெறும் பொழுது ஆங்காங்கே மின் விநியோகமும் தடை செய்யப்படும்.
அவ்விதமாக நாளை ஜூன் 13ல் திண்டுக்கல் மாவட்டத்தில் அய்யலூர் மற்றும் வடமதுரை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நாளை காலை 9 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை அய்யலூர் துணைமின்நிலையதில் உலா மின் பாதையில் பராமரிப்பு பண்ணி நடைபெற உள்ளதால் அய்யலூர் உட்பட குருந்தம்பட்டி, தங்கம்மாபட்டி, வளவிசெட்டியாபட்டி, வடுகபட்டி, மாமரத்துப்பட்டி, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
Exams Daily Mobile App Download
மேலும், வடமதுரை துணை மின் நிலையத்தில் காணப்பாடி மின் பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை காணப்பாடி உட்பட செங்குளத்துப்பட்டி, மொட்டனம்பட்டி, நந்தவனப்பட்டி, சிட்டம்பட்டி என அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.