தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – நாளை பள்ளிகள் திறப்பு! புத்தகங்கள் வழங்க ஏற்பாடு!

0
தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - நாளை பள்ளிகள் திறப்பு! புத்தகங்கள் வழங்க ஏற்பாடு!
தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - நாளை பள்ளிகள் திறப்பு! புத்தகங்கள் வழங்க ஏற்பாடு!
தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – நாளை பள்ளிகள் திறப்பு! புத்தகங்கள் வழங்க ஏற்பாடு!

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நாளை (ஜூன் 13) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது. இதனையடுத்து நாளை முதல் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

பாடப்புத்தகங்கள்:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் சற்று குறைய தொடங்கியதும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு கடந்த 2021 செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. முதல் கட்டமாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும் திறக்கப்பட்டு வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது. இந்த நேரத்தில் 15 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்றது. இதன் விளைவாக கொரோனா பாதிப்புகளும் படிப்படியாக குறைந்தது. இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் வழக்கம் போல பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது.

எல்பிஜி கேஸ் சிலிண்டருக்கான மானியம் கிடைக்கவில்லையா? இதை உடனே செய்யுங்கள்!

இதனையடுத்து பொதுத் தேர்வுகள், ஆண்டு இறுதி தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி கடந்த மே 2ம் தேதி 1 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு தொடங்கி மே 13ம் தேதி வரை நடைபெற்று முடிந்து 14 முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறைக்கு பிறகு 2022 – 2023 ம் கல்வியாண்டில் ஜூன் 14ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

அதன்படி நாளை (ஜூன் 13) 1 – 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு புத்தகங்கள் வழங்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. விடுமுறை நாட்களிலேயே பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு விநியோகிக்கும் பணிகள் நடைபெற்றது. தற்போது புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளதால் புத்தகங்கள் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!