தேனி மாவட்டத்தில் நாளை (மார்ச் 18) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை(மார்ச் 18) காலை 10 மணி முதல் மாலை 4 வரை பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்பட இருப்பதாக மின் வாரியம் சார்பில் அறிவித்து உள்ளனர்.
மின்தடை:
தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதம்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அனைத்து மாவட்டங்களிலும் மின்தடை ஏற்படும். மேலும் அவ்வாறு மின் விநியோகம் தடை படும் பகுதிகளுக்கு முன்னரே மின் வாரியம் சார்பாக அறிவிப்புகள் தெரிவிக்கப்படும். அது மட்டுமல்லாமல் மின்சாரம் தடைபட்டாலும் இன்வெர்ட்டரை வைத்து மின்சாரத்தை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் மின்சாரம் தங்குதடை இன்றி மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் மின் ஊழியர்கள் மூலமாக மாதந்தோறும் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்று நாட்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பராமரிப்பு பணிகள் செய்யப்படும்.
1 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு ஏப்ரல் 5 முதல் புதிய கல்வியாண்டு துவக்கம் – மாநில அரசு அறிவிப்பு!
இந்நிலையில் தற்போது தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் துணை மின் நிலையத்தில் நாளை (மார்ச் 18) ஆம் தேதி அன்று பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பெரியகுளம் மற்றும் வைகை அணையை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்ய இருப்பதாக மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்து உள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் வைகை அணை பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள், ஜெயமங்கலம், குள்ளப்புரம், வைகைபுதூர், ஜம்புலிபுதூர், மருகால்பட்டி, வைகை அணை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் நாளை (மார்ச் 18) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்ய இருப்பதாக மின் வாரியத்தின் சார்பில் கூறப்பட்டு உள்ளது. இந்த மின் தடையின் காரணமாக அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது அன்றாட தேவைகளை முன்னரே முடித்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.