1 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு ஏப்ரல் 5 முதல் புதிய கல்வியாண்டு துவக்கம் – மாநில அரசு அறிவிப்பு!
மாநிலம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் நிலைமை மேம்பட்டுள்ளதால் அனைத்து வகுப்புகளுக்கும் ஏப்ரல் 5 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று மிசோரம் மாநில கல்வித்துறை அமைச்சர் தகவல் அளித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு
கொரோனா தொற்றுநோய் காரணமாக பல்வேறு மாநிலங்கள் தோறும் மூடப்பட்ட பள்ளிகள் பல மாதங்களுக்கு பிறகு மீண்டுமாக திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மிசோரம் மாநிலத்திலும் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் நீண்ட காலமாக மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய மிசோரம் கல்வி அமைச்சர் லால்சந்தமா ரால்டே, அம்மாநிலம் முழுவதும் ஏப்ரல் 5ம் தேதி முதல் பள்ளிகள் முழுமையாக திறக்கப்படும் என்று தகவல் அளித்துள்ளார்.
மாநில அரசு ஊழியர்களுக்கு அரைநாள் சிறப்பு விடுமுறை – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
இது குறித்த உத்தரவுகளை வெளியிட்ட அவர், ‘நாட்டின் பல்வேறு பகுதிகளில் பள்ளிகள் வழக்கமான முறையில் செயல்படுவதற்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், மிசோரம் மாநிலத்திலும் புதிய கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் ஏப்ரல் 5 முதல் தொடங்கும்’ என்று தெரிவித்துள்ளார். அரசின் இந்த முடிவானது உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, நிலையான இயக்க நடைமுறைகளை முழுமையாக ஆய்வு செய்த பிறகு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்போது மிசோரம் மாநிலம் முழுவதும் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக் கல்வித்துறை செய்து முடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் துவங்கும் போது அனைத்து தனியார் பள்ளிகளும் புதிய கல்வி அமர்வில் இருந்து 100 சதவீத கட்டணம் வசூலிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுத முடியாத மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.