சென்னையில் நாளை (ஜன.28) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
சென்னையில் நாளை ஜனவரி 28 பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக சென்னை பல்லாவரம், அம்பத்தூர் / திருவேற்காடு சுற்றியுள்ள பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மின்தடை ஏற்படும்.
மின்வாரியம் அறிவிப்பு:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், துணை மின்நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணி நடைபெறும். துணை மின் நிலையங்களில் ஏற்படும் மின்கசிவு காரணமாக பல்வேறு விபத்துகள் நடைபெறுகிறது. மேலும் மழைக்காலங்களில் அடிக்கடி ஏற்படும் மின் தடைகளை தடுப்பதற்கு பராமரிப்பு பணி நடைபெறுகிறது. தமிழகத்தில் தற்போது பதவி ஏற்றுள்ள திமுக ஆட்சி அணைத்து துறைகளிலும் பல்வேறு நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன.
இந்திய அஞ்சல் துறையில் 17 காலிப்பணியிடங்கள் – ரூ.62000 சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்த வகையில் மின்வாரிய துறையில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. இந்த பராமரிப்பு பணி நடைபெறும் பொது மின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக சில மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தபட்டு மின்தடை ஏற்படும். இந்த வகையில் சென்னையில் நாளை ஜனவரி 28 பராமரிப்பு பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மின்தடை ஏற்படும்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – சிறு தானியங்கள் விற்பனை!
சென்னை பல்லாவரம் பகுதியில் மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள், ஜி.எஸ்.டி ரோடு, இந்திரா காந்தி ரோடு, மாரியம்மன் கோயில் தெரு, சென்னை சில்க்ஸ் ஏ2பி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். இதனை தொடர்ந்து அம்பத்தூர் / திருவேற்காடு பகுதி, பொன்னியம்மன் நகர், ராஜன் குப்பம், வி.ஜி,என் மகாலட்சுமி நகர், மெட்ரோ சிட்டி, அக்ரகாரம் டி.ஐ சைக்கிள் பகுதி விஜயலட்சுமிபுரம், வெங்கடாபுரம், சோழாபுரம் சாலை, அம்பத்தூர் ரயில் நிலையம், அம்பத்தூர் மார்க்கெட், எம்.டி.எச் சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.