இந்திய அஞ்சல் துறையில் 17 காலிப்பணியிடங்கள் – ரூ.62000 சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு தேவையான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட பல தகவல்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
கொரோனா கால கட்டத்திற்கு பிறகு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்திய அஞ்சல் துறையில் கார் ஓட்டுநர் பணியிடத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விருப்பம் உள்ளவர்களிடம் இருந்தும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதனால் வேலையில்லா இளைஞர்கள் இதற்கு விண்ணப்பித்து வேலைவாய்ப்புகளை பெற்று கொள்ளலாம்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – சிறு தானியங்கள் விற்பனை!
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பும் உள்ளவர்கள் 56 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரர்கள் லைட் மற்றும் ஹெவி டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் அனுபவம் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுவர்களுக்கு ரூ.18,000 முதல் ரூ.62,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. இப்பணிக்கு கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 17 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள் கவனத்திற்கு – சென்னை மக்கள் புகார்!
இதற்கு விண்ணப்பிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து The Manager, Mail Motor service, Goods shed Road, Coimbatore 641001 என்ற முகவரிக்கு மார்ச் 10ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இது தொடர்பான தகவல்களை பெற https://www.indiapost.gov.in/