தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள் கவனத்திற்கு – சென்னை மக்கள் புகார்!
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகளுக்கு அதிகமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில் புதிய ரேஷன் அட்டை பெற்ற சென்னை மக்கள் தற்போது ஒரு குற்றசாட்டு வைத்துள்ளனர்.
சென்னை மக்கள் புகார்:
இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக ரேஷன் கார்டு கருதப்படுகிறது. இந்த ரேஷன் அட்டை மூலம் ஏழை எளிய மக்கள் மலிவு விலையில் அரிசி, கோதுமை, பருப்பு, போன்ற அத்தியாவசிய பொருட்களை பெறுகின்றனர். பொதுமக்கள் வசதிக்காக தற்போது டிஜிட்டல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் வாடிக்கையாளர்களின் கைரேகை மற்றும் பயோமெட்ரிக் தகவல்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ரேஷன் அட்டை மூலம் தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதி 4000 ரூபாய் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அளிக்கப்பட்டது.
தமிழக அரசு பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – பட்டியல் தயார்!
மேலும் பொங்கல் பரிசு தொகுப்புகளும் ரேஷன் கடை மூலம் வழங்கப்பட்டது. இந்த வகையில் தற்போது புதிய ரேஷன் கார்டுகளுக்கு அதிகமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை, அம்பத்தூர், கொரட்டூர், முகப்பேர், மாதவரம், புழல், செங்குன்றம், ஆவடி, திருவேற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களுக்கு கடந்த 6 மாதங்களில் ரேஷன் கார்டு வழங்கப்பட்டு விட்டது.
இந்திய கடற்படையில் 50 காலிப்பணியிடங்கள் – மதிப்பெண் அடிப்படையில் நேர்காணல்..!
அந்த புதிய ரேஷன் அட்டையை வைத்து அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியவில்லை என்று புகார் எழுந்துள்ளது. நியாய விலைக் கடைகளுக்கு சென்று ரேஷன் கார்டை கொடுத்தால், அதை கைரேகை பதிவு இயந்திரத்தில் காட்டும் போது அந்த கார்டு முடக்கப்பட்டுள்ளது என குறுஞ்செய்தி வருவதாக கூறியுள்ளார். இதனால் குடும்ப அட்டைதாரர்கள் அதிக கோபத்திற்கு உள்ளானர்கள். ரேஷன் கடை ஊழியர்களுடன், ரேஷன் அட்டைதாரர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற முடியாமல் போனதை குறிப்பிட்டுள்ளனர்.