தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – சிறு தானியங்கள் விற்பனை!
தமிழக ரேஷன் கடைகளில் கம்பு, திணை, குதிரைவாலி, சாமை, வரகு அரிசி தமிழ்நாட்டில் நியாய விலைக்கடைகள் மூலம் சிறு தானியங்களை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வந்துள்ளது.
சிறுதானியங்கள்:
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மாதம் ரேஷன் அட்டைதாரர்கள் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் பெற்று வருகின்றனர். அதனை தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு பரவிய கொரோனா இரண்டாம் அலையின் போது நிவாரணத் தொகையாக 4000 ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் இலவசமாக மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. கடந்த ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசின் ஆணைக்கிணங்க தமிழகத்தில் ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டமும் அமலில் உள்ளது. தமிழகத்தில் கடந்த 14ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 வகை பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது.
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள் கவனத்திற்கு – சென்னை மக்கள் புகார்!
திமுக அரசு பெண்களின் நலனை கருத்தில் கொண்டு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.இதையடுத்து 2021 ம் ஆண்டில் ஏராளமானோர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். கடந்த இந்த ஆகஸ்ட் மாதம் அரசு வேளாண் துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்தது. அதில் ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கருப்பட்டி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – பட்டியல் தயார்!
அதன் தொடர்ச்சியாக தற்போது சிறு தானியங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பாரம்பரிய உணவு பொருட்களான உடலுக்கு நன்மை அளிக்க கூடிய கம்பு, திணை, குதிரைவாலி, சாமை, வரகு அரிசி உள்ளிட்ட சிறு தானிய வகைகளை கொள்முதல் செய்து தமிழக ரேசன் கடைகளில் விற்பனை செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.