பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு 2022 – ரூ.60000 சம்பளம்!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் வெல்த் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் துறையில் 58 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வங்கி வேலைவாய்ப்பு:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்து வரும் நிலையில் மற்ற துறைகளை தொடர்ந்து வங்கிகளிலும் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட தகவலின் படி எழுத்தர்கள் மற்றும் கீழ்நிலை பணியாளர்கள் உள்ளிட்ட 40,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி, பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் மொத்தம் 8,05,986 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும். அதில் 41,177 பணியிடங்கள் காலியாக உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் நாளை (ஜன.28) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மற்ற வங்கிகளை தொடர்ந்து பேங்க் ஆப் பரோடா வங்கியில் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் துறையில் 58 காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடத்திற்கு 5 வருட ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார். விண்ணப்பதாரர் நேர்காணல் முறை மூலம் தேர்வு செய்யப்படுவார். விண்ணப்பக் கட்டணமாக ரூ. 600 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் வங்கியில் அதிகாரபூர்வ இணையதளமான bankofbaroda.in மூலம் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
காலிப்பணியிடங்கள்:
தலைமை-வெல்த் ஸ்ட்ராட்டஜி நிபுணர் – 28
வெல்த் ஸ்ட்ராட்டஜி ஸ்ட் – 2
முதலீட்டு ஆராய்ச்சி மேலாளர் – 2
போர்ட்ஃபோலியோ – 2
NRI வெல்த் ப்ராடெக்ட் மேலாளர் – 1
தயாரிப்பு மேலாளர் – 1