Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – புதிய விதிமுறைகள் வெளியீடு!
அஞ்சலகத்தில் பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் உள்ள விதிமுறைகள் தற்போது மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் என்னென்ன என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
செல்வமகள்:
இந்தியாவில் வங்கிகளுக்கு இணையாக அஞ்சல் நிலையங்களும் பல்வேறு சேமிப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டங்கள் சாமானிய மக்கள் முதல் அனைத்து தரப்பினரும் சேர்ந்து பயன் பெறும் வகையில் உள்ளதால் சேமிப்பு திட்டங்களில் சேர மக்கள் ஆர்வம் காண்பித்து வருகின்றனர். அஞ்சலகத்தில் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம், ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் சேமிப்பு திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் சிறந்த வட்டியும், வரி சலுகையும் வழங்கப்படுவதால் சேமிப்பு திட்டங்களில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
பெண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் செல்வமகள் சேமிப்பு திட்டமும் உள்ளது. இதன் மூலம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் செல்வமகள் சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2 பெண் குழந்தைகள் வைத்துள்ளவர்கள் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேரலாம். இதில் 10 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு தனியாக கணக்கு தொடங்கலாம். 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு பெற்றோருடன் சேர்ந்து சேமிப்பு திட்டத்தின் கீழ் கூட்டுக் கணக்கைத் தொடங்கலாம்.
பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – மே 16 முதல் அடுத்த கல்வியாண்டு வகுப்புகள் தொடக்கம்!
புதிய விதிமுறைகள்:
- 18 வயதை தாண்டிய பெண்கள் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கை பயன்படுத்தலாம்.
- சேமிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 250 ரூபாய் கட்டாயம் செலுத்த வேண்டும். தற்போது 250 ரூபாய் செலுத்தாவிட்டாலும் வட்டி தொடர்ந்து வரும்.
- தற்போது, மெச்சூரிட்டிக்கு முன்பாகவே பெண் இறந்துவிட்டாலோ, கொடிய நோயால் அவதிப்பட்டு வந்தாலோ கணக்கை மூடிக் கொள்ளலாம்.
- முன்பு ஒரு குடும்பத்தில் 2 பெண்களுக்கு மட்டுமே செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
- இரட்டை குழந்தைகள் பிறந்து, பிறகு மூன்றாவது குழந்தை பிறந்தால் மூன்று குழந்தைகள் வரை செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம்.