பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – மே 16 முதல் அடுத்த கல்வியாண்டு வகுப்புகள் தொடக்கம்!

0
பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு - மே 16 முதல் அடுத்த கல்வியாண்டு வகுப்புகள் தொடக்கம்!
பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு - மே 16 முதல் அடுத்த கல்வியாண்டு வகுப்புகள் தொடக்கம்!
பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – மே 16 முதல் அடுத்த கல்வியாண்டு வகுப்புகள் தொடக்கம்!

கொரோனாவினால் இழந்த கற்றல் திறனை சமாளிக்க மே 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் துவங்கப்படும் என கர்நாடகா அறிவித்துள்ளது. மேலும், கற்றல் திறனை அதிகரிப்பதற்காகவே ஒரு திட்டம் ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அடுத்த கல்வியாண்டு:

உலகம் முழுவதுமே கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு ஆளாகி பல லட்சக்கணக்கான மக்கள் பலியாயினர். கொரோனா பரவலின் காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப்பட்டன. தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் சற்று குறைந்த காரணத்தினால் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்களுக்கு தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு எப்படி இருக்கு?

ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு சரியாக பாடங்கள் நடத்தாத காரணத்தினால் மாணவர்களின் கல்வித்திறன் மிகவும் பாதிப்படைந்துள்ளது. எப்போதும் மார்ச், ஏப்ரல் மாதத்திலேயே அனைத்து பொதுத்தேர்வுகளும் நடத்தப்பட்டு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்தாண்டு கர்நாடகா மாநிலத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை நினைவில் கொண்டு கல்வித்திறனை மேம்படுத்த மே 16 ஆம் தேதியில் இருந்து பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் அறிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

மேலும், கற்றல் திறனை ஊக்குவிக்க கா்நாடக அரசு கற்றல் புதுப்பித்தல் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதுமட்டுமல்லாமல் 2022-23-ஆம் கல்வியாண்டு கற்றல் புதுப்பித்தல் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கற்றல் புதுப்பித்தல் திட்டத்தை தனியாா் பள்ளிகளிலும் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியா்களுக்கான கையேடு, கற்றல் தாள்களை அரசே வழங்கிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு முடிவுகள் மே 3ஆவது வாரத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!