சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு எப்படி இருக்கு?

0
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு - பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு எப்படி இருக்கு?
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு - பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு எப்படி இருக்கு?
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு எப்படி இருக்கு?

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. 2020-ம் ஆண்டு தான் CSK பிளேஆஃப்களுக்கு தகுதி பெறாத ஒரே சீசன். இந்த ஆண்டும் ப்ளேஆஃப் சுற்றுக்கான பாதை மிகவும் கடினமாகவே உள்ளது. ஆனால் கால்குலேட்டரை தட்டி பார்க்கையில் இன்னும் சில வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கிறது.

சென்னை பிளேஆப் என்ட்ரி:

ஐபிஎல் 2022 புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. நடப்பு சாம்பியன் அணி சீசன் தொடக்கத்தில் விளையாடிய 6 போட்டிகளில் 5ல் தோல்வியடைந்ததால் பட்டியலில் பின்னுக்கு சென்றது. இருப்பினும் ரவீந்திர ஜடேஜா கேப்டன் பதவியில் இருந்து விலகி, தோனியிடம் மீண்டும் ஒப்படைத்த பிறகு அடுத்து விளையாடிய 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற முடிந்தது. தற்போது புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி ஒன்பதாவது இடத்தில் உள்ளது. ஆனால் இந்த சீசனில் மீண்டும் பிளேஆஃப்களுக்கு தகுதி பெற சில வாய்ப்புகள் உள்ளது.

Exams Daily Mobile App Download

மறுபுறம் சிஎஸ்கே 8 போட்டிகளில் விளையாடிய பிறகு ரவீந்திர ஜடேஜா கேப்டன் பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்தபோது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகினர். சீசனின் நடுப்பகுதியில் கேப்டன் பதவி மாறுவது சிஎஸ்கே வரலாற்றில் இதுவரை நடந்ததில்லை. மேலும் இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில், போட்டிக்கு முன் பதவியில் இருந்து விலகிய கேப்டன் சீசனின் நடுவில் மீண்டும் தலைமைப் பொறுப்பை பெறுவது இதற்கு முன் நடந்ததில்லை. ஆனால் எம்எஸ் தோனி மீண்டும் கேப்டனாக களமிறங்கியது அணியின் செயல்பாடுகளில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் தற்போது 14 புள்ளிகளுடன் உள்ளன. எனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஆண்டு ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால், ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். ராஜஸ்தான் ராயல்ஸ் எஞ்சிய அனைத்து ஆட்டங்களிலும் தோற்றால், சிஎஸ்கே 14 புள்ளிகளில் சிக்கித் தவிக்கும். அதன் பின்னர் ரன் ரேட் அடிப்படையில் தகுதி நிர்ணயம் செய்யப்படும்.

RR மூன்று ஆட்டங்களிலும் தோற்று RCB ஒரு ஆட்டத்தில் தோற்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் தலா இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைய வேண்டும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் அடுத்து வரவுள்ள போட்டிகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!