Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – முழு விபரம் இதோ!
இந்திய அஞ்சல்துறை பெண் குழந்தைகளுக்கு உதவும் வகையில் செல்வமகள் சேமிப்பு என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இத்திட்டம் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.
செல்வமகள் சேமிப்பு திட்டம்:
இந்திய அஞ்சல் நிலையம் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் சாமானிய மக்கள் முதல் அனைவரும் பயனடையும் வகையில் உள்ளதால் பெரும்பாலும் மக்கள் அஞ்சலக திட்டங்களில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். மற்ற திட்டங்களை தொடர்ந்து குழந்தைகளுக்கும் அஞ்சலகத்தில் சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அந்த வகையில் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் செல்வமகள் சேமிப்பு உள்ளது. மத்திய அரசால் கடந்த 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் தங்கள் குழந்தையின் பேரில் கணக்கு தொடங்கலாம். குறைந்தபட்சம் ரூ.250 செலுத்தி இத்திட்டத்தில் சேரலாம். அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். 2 பெண் குழந்தைகள் வைத்துள்ள பெற்றோர்கள் இக்கணக்கை தொடங்கலாம். செல்வமகள் திட்டத்தில் 7.6 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் புதிய விதிமுறைகள்:
- 18 வயதை தாண்டிய பெண்கள் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கை பயன்படுத்தலாம்.
- செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 250 ரூபாய் கட்டாயம் செலுத்த வேண்டும். இல்லையெனில் வட்டி கிடைக்காது. தற்போதைய விதிமுறைப்படி 250 ரூபாய் செலுத்தாவிட்டாலும் வட்டி தொடர்ந்து வரும்.
- மெச்சூரிட்டி க்கு முன்பாகவே பெண் இறந்துவிட்டாலோ, கொடிய நோயால் அவதிப்பட்டு வந்தாலோ கணக்கை மூடிக் கொள்ளலாம்.
- ஒரு குடும்பத்தில் 2 பெண்களுக்கு மட்டுமே செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
- முதலில் இரட்டை குழந்தைகள் பிறந்து, பிறகு மூன்றாவது குழந்தை பிறந்தால் மூன்று குழந்தைகள் வரை செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம்.