தமிழகத்தில் முதுகலை பாட ஆசிரியர் காலிப்பணியிட அறிவிப்பு – முழு விவரம் இதோ!
தமிழகத்தில் முதுகலை பாட ஆசிரியர் பணியிடத்திற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், பணியிடம் குறித்து விரிவான தகவல்கள் கீழே உள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பணியிடம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இரண்டு வருடங்களாக செயல்படாமல் இருந்தது. கொரோனா பரவல் மிக வேகமாக பரவக்கூடிய நோய் என்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. மேலும் சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வந்தன. தமிழகத்தில் பொது தேர்வுகள் நடத்தப்படாமல் மாணவர்கள் நேரிடையாக ஒழுக்கத்தின் அடிப்படையில் அடுத்த வகுப்புக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தியாவில் “இவர்களுக்கு” குடும்ப ஓய்வூதியம் கிடையாது – ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு!
தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட தொடங்கியது. மாணவர்கள் அனைவரும் ஆர்வமுடன் பள்ளி செல்ல ஆரம்பித்தனர். இதனிடையே 10 மற்றும் 12 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதால் தமிழக அரசு தற்காலிக பணி நியமன அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்து வருகிறது.
Exams Daily Mobile App Download
மேலும் தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் டெட் தேர்வு நடத்தப்பட உள்ளது. மேலும் கொரோனா கால இடைவெளியினால் மாணவர்களின் கற்றல் திறன் குறைந்து காணப்படுகிறது. இதனால் அரசு பள்ளிகளில் மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சங்ககிரி பகுதியில் உள்ள சங்கர் மேல்நிலைப் பள்ளியில் நிரந்தர முதுநிலை பாட ஆசிரியர் பணியிடத்திற்கு தகுதியானவர் தேவை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி வாய்ந்தவர் கல்வி அனுபவ நகல்கள் மற்றும் விண்ணப்பங்களை 25.08.2022 – க்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதியாக M.A. , Economics , B.Ed . ,முடித்திருக்க வேண்டும் மற்றும் SCA ( அருந்ததியர் ) பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.