நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு?? – பிரதமர் மோடி இன்று ஆலோசனை!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருவதால் மாநிலங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டம் இன்று நண்பகல் 12.30 மணியளவில் காணொளி காட்சி மூலமாக நடைபெற உள்ளது.
ஆலோசனை கூட்டம்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் மிகவும் வேகமாக பரவி வருகிறது இதன் காரணமாக தமிழகம்,கேரளா உள்பட 6 மாநிலங்களில் கொரோனா தாக்கம் வேகமாக பரவி வருவதால் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் தீவிரமடைந்துள்ளது. சில மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் நேற்று ஒருநாள் மட்டும் 20000க்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
அதில் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகளும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கொரோனா அதிகம் பரவும் பகுதிகளில் கட்டுப்பாடு விதிகளை தீவிரப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி பொது விடுமுறை – தலைமை செயலாளர் உத்தரவு!!
இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை நோய் பரவலை தடுக்க இன்று பிரதமர் மோடி தலைமையிலான அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி மூலமாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இன்று நண்பகல் 12.30 மணிக்கு காணொளி காட்சி மூலமாக நடத்தப்படும் இந்த ஆலோசனையின் முடிவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். ஏற்கனவே ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி பணிகளுக்காக ஆலோசனை கூட்டம் குறிப்பிடத்தக்கது.