‘இந்த’ 500 ரூபாய் நோட்டு செல்லாதா? PIB Fact Check சொல்வது என்ன?
இந்தியாவில் 500 ரூபாய் நோட்டுகளில் இரண்டு வகை உள்ளதாகவும் இதில் ஒரு வகை செல்லாது என்றும் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போன்று தகவல்கள் பரவி வருகின்றன. இது தொடர்பாக PIB Fact Check மூலமாக கண்டறியப்பட்டுள்ள உண்மை செய்தியை பற்றி பார்ப்போம்.
பொதுமக்கள் கவனத்திற்கு
இந்தியாவில் கள்ள நோட்டுகளை பதுக்கி வைக்கப்பதை தடுக்க பழைய 500 ரூபாய் மற்றும் பழைய 1000 ரூபாய் ரத்து செய்யப்பட்டு புதிய 500 ரூபாய், புதிய 200 ரூபாய், மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இது கடந்த 2016ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து தற்போது 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அதிகமாக புழக்கத்தில் உள்ளன. இந்த நிலையில் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற தகவல் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்படுமா? அமைச்சர் விளக்கம்!
மேலும் சமூக வலைதளங்களில், இரண்டு வகையான 500 ரூபாய் நோட்டுகள் காணப்படுகின்றன. இதில், காந்திஜியின் புகைப்படத்திற்கு அருகில் பச்சை நிற கோடு உள்ளது. மற்றொரு வகையான புகைப்படத்தில் காந்திஜியின் புகைப்படத்திலிருந்து சிறிது தொலைவில் இந்த பச்சைக்கோடு உள்ளது. இந்த கோடு இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையெழுத்துக்கு அருகில் உள்ளதாகவும் இருக்கிறது. இதையடுத்து இந்த புகைப்படத்தின் கீழ் காந்திஜியின் அருகில் பச்சைக் கோடு போடப்பட்டிருக்கும் 500 ரூபாய் நோட்டு செல்லாது அதனால் மற்றொரு 500 ரூபாய் நோட்டை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதில் ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பத்துடன் பச்சை நிற கோடு இருப்பதாகவும் இதனை போலியான ரூபாய் நோட்டு என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனை அனைவருக்கும் தயவுசெய்து ஷேர் செய்யவும் என்ற செய்திகள் இடம் பெற்றிருந்தது. இது தொடர்பாக PIB Fact Check மூலம் ஆராய்ந்ததில், இந்திய ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, இந்த 2 வகையான 500 ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் யாரும் இந்த தகவலை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.