தமிழகத்தில் கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்படுமா? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2000 ஐ நெருங்கியுள்ளது. இந்த சூழலில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தொடக்க பள்ளிகள் மூடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பள்ளிகள் மூடல்:
தமிழகத்தில் கொரோனா நான்காம் அலை பரவத் தொடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2000 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னையில் மட்டும் 909 பேருக்கும், செங்கல்பட்டு 352, காஞ்சிபுரம் 71 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்பு எண்ணிக்கை மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட ஆட்சியர்கள் நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் போட்டி – பரிசு தொகை மட்டுமே ரூ.10 ஆயிரம்!
மேலும் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா விடுமுறை மற்றும் கோடை விடுமுறை இவைகள் எல்லாம் முடிந்து கடந்த 13ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் பள்ளிகளில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என பெற்றோர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் முகமூடியின்றி வகுப்பறையில் அமர்ந்தாலும் பள்ளி நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. நாள் முழுவதும் பள்ளி நேரத்தில் முகக்கவசம் அணிவது பாதுகாப்பானதா என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதனால் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தொடக்க பள்ளிகள் மூடப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விளக்கமளித்த சுகாதாரத்துறை அமைச்சர் பள்ளிகள் மூடப்படாது மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கொரோனா தொற்று 5 சதவீதத்துக்கும் குறைவாக தான் உள்ளது என்று கூறியுள்ளார்.