35 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம், PF வட்டி உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
7வது ஊதியக் குழுவின் கீழ் உள்ள 35 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் 3 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சம்பள உயர்வு, வருங்கால வைப்பு நிதி வட்டி அதிகரிப்பு மற்றும் 18 மாத DA நிலுவைத் தொகை குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு சம்பளம்
மத்திய அரசு ஊழியர்கள் ஜூலை மாதத்தில் கூடுதல் பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. முதலாவதாக ஊழியர்களுக்கு அகவிலைப்படி (டிஏ) உயர்வும், இரண்டாவதாக, 18 மாத DA நிலுவைத் தொகையை செலுத்துவதும், மூன்றாவதாக, வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) மீதான வட்டி அதிகரிப்பும் குறித்த செய்திகள் வெளியாகலாம். அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்காக லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். ஏப்ரல் மாத ஏஐசிபி இன்டெக்ஸ், டிஏவை நிர்ணயிப்பதில் முக்கிய காரணியாக உள்ளது, அடுத்த மாதம் டிஏ அதிகரிப்பு வழங்கலாம்.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – முதல்வரின் முடிவு என்ன?
ஊடக அறிக்கைகளின் படி, ஜூலை மாதத்தில் DA ஐந்து சதவிகிதம் உயர்த்தப்படலாம். இதனால் மொத்த டிஏ 39 சதவீதமாக உயறும். அறிக்கைகளின்படி, ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான 18 மாத கால DA நிலுவைத் தொகையை வழங்குவது தொடர்பான பிரச்சினை விரைவில் எடுக்கப்படலாம். இவை அளிக்கப்பட்டதும், ஒருவரது கணக்கில் ரூ.2 லட்சம் வரை நிலுவையில் உள்ள பாக்கிகள் செலுத்தப்படும். நிலுவைத் தொகையானது ஊழியர்களின் ஊதியம் மற்றும் கட்டமைப்பைப் பொறுத்து இருக்கும்.
Exams Daily Mobile App Download
2021-22 நிதியாண்டிற்கான EPF தொகையில் 8.10% வருடாந்திர வட்டி விகிதத்தை வரவு வைக்குமாறு மத்திய அறங்காவலர் குழு, EPF பரிந்துரைத்துள்ளது. வட்டி விகிதம் அரசாங்க வர்த்தமானியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து EPFO விரைவில் அதன் சந்தாதாரர்களின் கணக்கில் வட்டி வரவு வைக்கும். EPFO ஒவ்வொரு ஆண்டும் PF வட்டி விகிதத்தை அறிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அரசு இந்த 3 அம்சங்களையும் நிறைவேற்றும் போது இதனால் 7வது ஊதியக் குழுவின் கீழ் உள்ள 35 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் பலன் அடைவார்கள்.