தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – முதல்வரின் முடிவு என்ன?
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று நடைபெற்ற மாவட்ட பேரவை கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுலுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டம்
தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு கடந்த 2003ஆம் ஆண்டு வரைக்கும் மட்டுமே பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி சலுகைகள் கிடைத்து வந்தன. இதன்பின்பு அரசு ஊழியர்களுக்கு பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் கிடையாது என பல பாதகமான அம்சங்கள் இடம் பெற்ற காரணத்தினால் அரசு பணியில் சேர்ந்த ஊழியர்கள் அனைவரும் பழையபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை விடுத்து வந்தனர்.
தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை
தற்போது வரைக்குமே அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனாலும், அரசு இது குறித்தான எந்த அறிவிப்பை மட்டும் வெளியிடுவதில்லை. இந்நிலையில், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் மாவட்ட பேரவை கூட்டம் நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏழாவது மத்திய ஊதியக் குழு பரிந்துரையின் படி மாநில அரசால் மறுக்கப்பட்ட இருபத்தி ஒரு மாத நிலுவைத் தொகையையும் வழங்க வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
இது மட்டுமல்லாமல் அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூபாய் 9 ஆயிரம் வழங்க வேண்டுமெனவும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்க நடவடிக்கை எடுக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாக தனியார் மருத்துவமனைகளில் கொள்ளையடிப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மருத்துவப்படியாக மாதம் ரூபாய் 300 ரூபாயை 1000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.