தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு? நிதியமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படுமா என்பது குறித்து தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் விளக்கமளித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை:
தமிழகத்தில் கொரோனா கால கட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சில மாவட்டங்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100 ஐ தாண்டி உள்ளது. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைக்கப்படுமா என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜ அவர்கள் விளக்கமளித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, தற்போதைய நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைப்பு சாத்தியமில்லை என்று தெரிவித்தார்.
தமிழக மின் நுகர்வோர் சேவை மைய எண்கள் அறிவிப்பு – முதல்வர் திறந்து வைப்பு!
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.10 ஆக இருந்த வரியை ரூ.32.90 ஆக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. ரூ.32.90 வரியில் ரூ.31.50 ஐ ஒன்றிய அரசு எடுத்துக்கொண்டு ரூ.1.4 ஐ மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் தமிழகத்திற்கு வர வேண்டிய ரூ.336 கோடி வருவாய் குறைந்துள்ளளது என்று தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் நபர் ஓருவர் ரூ.1 வரி செலுத்தினால் அதில் நான்கு பைசா மட்டுமே தமிழக அரசுக்கு கிடைக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைத்தால் அதை ஒன்றிய அரசுக்கு விட்டுக்கொடுப்பது போல் ஆகிவிடும்.
தமிழகத்தில் பிளஸ் 2 தனித்தேர்வர்களும் ஆல் பாஸ்? மாணவர்கள் எதிர்பார்ப்பு!
தற்போது தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.98 ஆக விற்பனை செய்யப்படும் நிலையில் அதில் ரூ.70 ஒன்றிய அரசுக்கும், உற்பத்தி செலவுக்கும் செல்கிறது. தமிழ்நாடு அரசுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.20 மட்டுமே கிடைக்கிறது. எனவே தற்போதைய சூழலில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைப்பது சாத்தியமில்லை என்று தெரிவித்தார். கடந்த ஆட்சி காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தினால் மாநிலத்தில் பெட்ரோல் விலை ரூ.100 ஐ எட்டும் என்று எச்சரிக்கை விடுத்தேன் என்றும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.