தமிழக மின் நுகர்வோர் சேவை மைய எண்கள் அறிவிப்பு – முதல்வர் திறந்து வைப்பு!
மின்துறை தொடர்பான புகார்கள் மற்றும் மக்களுக்கு தேவையான விவரங்களை கேட்டறிய தற்போது தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோருக்கான சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துள்ளார்.
மின் நுகர்வோர் சேவை மையம்:
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற பின்பு மக்களுக்கு சேவையாற்றும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் தற்போது மின்தடை அதிகமாக ஏற்பட்டு வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது. கடந்த ஆட்சி காலத்தில் சுமார் 9 மாத காலமாக பராமரிப்பு பணிகள் ஏதும் மேற்கொள்ளாததாலே தற்போது மின்தடை ஏற்படுகிறது என்று தமிழக மின்துறை அமைச்சர் தெரிவித்தார்.
பழைய 5, 10 ரூபாய் நோட்டுகளுக்கு ரூ.30,000 வரை பெறலாம் – எப்படி தெரியுமா?
இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள 10 மாடி கட்டட மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின் தொடரமைப்பு கழக அலுவலகத்தில் நவீன கணினி மையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டது. இதை தொடர்ந்து சென்னை அண்ணா சாலையில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் மின் நுகர்வோர் சேவை மையம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
B.Ed., M.Ed படிப்புகளுக்கான ஆன்லைன் தேர்வு – ஜூன் 28ல் தொடக்கம்!
இதன் மூலம் மக்கள் மின் துண்டிப்பு, மின் சம்பந்தமான அனைத்து புகார்களையும் மின் நுகர்வோர் சேவை மையத்தில் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மின்தடை, மின் கம்பங்கள் சேதம் பற்றி புகார் அளிக்கலாம் என்றும் தமிழகம் முழுதும் மக்கள் மின்தடை தொடர்பாக புகார்களை 1912 என்ற கட்டணமில்லா எண் மூலம் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அளிக்கப்பட்ட புகாருக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நுகர்வோருக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.