தமிழகத்தில் பிளஸ் 2 தனித்தேர்வர்களும் ஆல் பாஸ்? மாணவர்கள் எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பிளஸ் 2 தனித்தேர்வர்கள் குறித்து தற்போது வரை தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் தனித்தேர்வர்கள் முறையான அறிவிப்பு வெளியாகும் என காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பிளஸ் 2 தனித்தேர்வர்கள்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் அச்சம் காரணமாக மாணவர்கள் நலன் கருதி 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து தற்போது பள்ளிக் கல்வித்துறை தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் முறை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறது. ஆனால் தமிழக அரசு தனித்தேர்வர்கள் குறித்து எந்த முறையான அறிவிப்பும் வெளியிடவில்லை.
B.Ed., M.Ed படிப்புகளுக்கான ஆன்லைன் தேர்வு – ஜூன் 28ல் தொடக்கம்!
இதனால் பிளஸ் 2 தனித்தேர்வர்கள் கடும் வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் அவர்கள் பொதுத்தேர்விற்காக ஏற்கனவே கட்டணம் செலுத்தி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தாங்களும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவோம் என்று அறிவிக்கப்படுமா அல்லது தங்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தப்படுமா என்று தனித்தேர்வர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. மேலும் கடந்த 2019-20 கல்வியாண்டில் கொரோனா பரவல் குறைந்த பின் தனித்தேர்வர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
TN Job “FB Group” Join Now
எனவே கடந்த ஆண்டை போல் தற்போதும் சிறப்பு தேர்வு நடத்தி மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும் அல்லது தேர்வின்றி தேர்ச்சி என்று அறிவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. இது குறித்து தமிழக அரசு விரைவாக ஆலோசித்து அறிக்கை வெளியிட்டால் மட்டுமே தனித்தேர்வர்கள் தங்களது உயர்கல்வி வகுப்பில் சேர்வதற்கு தாமதம் ஏற்படாது என்று கூறப்படுகிறது. எனவே இது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் விரைவில் முடிவெடுப்பார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.